ஆதியிலே தேவன் வார்த்தையை உரைத்தார், உலகம் உண்டாயிற்று. அந்த வார்த்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை இந்த வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்திலும் உங்களுக்காகக் காத்திருக்கிறது — இலவசமாக வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. (யோவான் 1:1-5)
சுவிசேஷம்
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. — யோவான் 5:39
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். — லூக்கா 24:27
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. — யோவான் 1:14
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. — மீகா 5:2
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். — யோவான் 3:16-17
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். — லூக்கா 19:10
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். — யோவான் 8:12
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, — ரோமர் 3:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். — ரோமர் 6:23
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். — ரோமர் 5:8
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். — ஏசாயா 53:5-6
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. — எபேசியர் 1:7
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். — மத்தேயு 11:28-30
நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். — யோவான் 10:11
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். — யோவான் 17:3
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். — யோவான் 14:6
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; — எபேசியர் 2:8-9
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். — யோவான் 1:12
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். — வெளிப்படுத்தின விசேஷம் 3:20
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். — ரோமர் 10:13
ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். — லூக்கா 18:13
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். — ரோமர் 10:9
தமிழ் ஆடியோ வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள்
தமிழ் ஆடியோ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள்
முக்கிய சொற்கள்:
தமிழ் ஆடியோ வேதாகமம்
தமிழ் ஆடியோ பைபிள்
ஆடியோ பைபிள் தமிழ்
தமிழ் ஒலி வேதாகமம்
தமிழ் பைபிள் கேட்க
தமிழ் வேதாகமம் கேட்க
ஒலி வடிவில் தமிழ் வேதாகமம்
தமிழ் வேதாகமம் ஆன்லைன்
தமிழ் பைபிள் ஆன்லைன்
தமிழ் வேதாகமம் வாசிக்க
இலவச தமிழ் வேதாகமம்
இலவச ஆடியோ பைபிள் தமிழ்
தமிழ் பைபிள் இலவசம்
தமிழ் ஆடியோ பைபிள் mp3
ஆடியோ பைபிள் mp3 தமிழ்
தமிழ் வேதாகமம் பதிவிறக்கம்
தமிழ் பைபிள் download
தமிழ் ஆடியோ பைபிள் ஆஃப்லைன்
ஆஃப்லைன் தமிழ் வேதாகமம்
பரிசுத்த வேதாகமம் தமிழ்
பரிசுத்த வேதாகமம் O.V. BSI
தமிழ் சத்தியவேதம்
தமிழ் பழைய ஏற்பாடு ஆடியோ
தமிழ் புதிய ஏற்பாடு ஆடியோ
தமிழ் வேதாகம வசனம்
இன்றைய வேத வசனம் தமிழ்
தமிழ் பைபிள் வசனங்கள்
ஆதியாகமம் தமிழ் ஆடியோ
மத்தேயு சுவிசேஷம் தமிழ்
யோவான் சுவிசேஷம் தமிழ்
சங்கீதம் தமிழ் ஆடியோ
வெளிப்படுத்தின விசேஷம் தமிழ்
தமிழ் ஆடியோ பைபிள் செயலி
தமிழ் வேதாகமம் கேட்டு வாசிக்க
தேவ வசனம் தமிழ்
தமிழ் கிறிஸ்தவ வேதாகமம்